சென்னை:

ந்தியன் 2 பட விபத்து விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்த சென்னை காவல்துறை தன்னை நடித்து காண்பிக்கச் சொல்லி  துன்புறுத்துவதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

கடந்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி நள்ளிரவு இந்தியன்2 படப்பிடிப்பின்போது, கிரேன் சாய்ந்து விழுந்து உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பலியானர்கள். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கு பதிவு செய்த காவல்துறை, டைரக்டர் சங்கர், நடிகர் கமல்ஹாசன் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனை விசாரணைக்கு அழைத்த காவல்துறையினர், விபத்து நடந்தது எப்படி என நடித்துக்காட்டச் சொல்லி துன்புறுத்தியதாக, நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தற்போது கொரோனா தாக்கம் காரணமாக உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமைநீதிபதி அறிவித்துள்ள நிலையில்,

கமல்ஹாசனின் ‘அவசர’ முறையீட்டு வழக்கை இன்று பிற்பகலில் விசாரிப்பதாக  நீதிபதி இளந்திரையன்  தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது…

நடிகர்களின் சாதாரண விபத்து வழக்கு அவசர வழக்கா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…