கொரோனாவில் இருந்து சென்னையை மீட்க ‘நாமே தீர்வு’ இயக்கத்தை தொடங்கிய உள்ள கமல்ஹாசன் அது தொடர்பாக வீடியோ மூலம்  மக்களுக்கு அழைப்பு வெளியிட்டு உள்ளார்.

கொரோனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதை எடுத்துக்கூறும் கமல்ஹாசன்,  இது விமர்சனங்களுக்கு நேரமில்லை, சிலலரை அரசியலும் தேவையில்லை, நாளை என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது, இது ஆக்கப்பூர்வமான நேரம், கொரோனாவால் மரணம் என்ற எண்ணத்தை தூக்கி எறிவோம், கொரோனாவில் இருந்து சென்னையை மீட்போம் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

சென்னை தமிழகத்தின் மருத்துவ வசதிக்கான தலைநகரம், அதை கொரோனாவுக்கான தலைநகரமாக நாம் மாற்றிவிடக்கூடாது.  

இதற்கான ஒரு முயற்சிதான்  தொடக்கம்தான்  நாமே தீர்வு என்ற இயக்கம்… இது ஒரு தனிமனித இயக்கம் அல்ல. நாம் அனைவரும் பங்கெடுக்கும்  இயக்கம், பங்கெடுக்க வேண்டிய இயக்கம், இனி வரும் சில வாரங்களுக்கு ஜாதி, மதம், இனம் , மொழி, கட்சி பேதங்களை மறந்தது ஒரு கூட்டில் இணைவோம்.

இந்த முயற்சியின் முதல் தொண்டன் நான், இன்னும்  நிறைய தொண்டர்கள் தேவை, வாருங்கள், நாமே தீர்வோம்.. நாளை நமமே…

பங்குபெறுவோம், சென்னையை மீட்போம்…

இந்த படையில் இணைய 63698 11111 என்ற எண்ணுக்கு அழைக்கிறோம்…