மலுக்கும் பாடகர் எஸ்.பி.க்கும் 40 ஆண்டுக்கும் மேலாக நட்பும் அதையும் தாண்டி அண்ணன் தம்பி என்ற பந்தத்தை சினிமா தந்திருக்கிறது.


’இளமை இதோ இதோ ..’ என்று வருடா வருடம் எல்லோருக்கும் இளமையை திரும்ப அளித்தவர்கள் இவர்கள் இரு வரும் இணைந்தால் அந்த பாடல் சூப்பர் ஹிட்தான். எத்தனை பாடல்கள் ஹிட் என்பது ஒரு பக்கத்தில் அடங்காது. இன்று கொரோனா பாதித்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எஸ்பிபி இருக்கி றார். அவர் விரைந்து வர வேண்டும், மீண்டும் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
கமல் வெளியிட்ட மெசேஜில், ‘அன்பிற் கினிய அன்னய்யா உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரலின்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னய்யா’ என தெரிவித்திருக்கிறார்.