புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலை டெல்லியில் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளின் தலைமையில் முக்கிய இரண்டு கூட்டணிகள் அமைந்து வருகின்றன. மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணி நடவடிக்கையை தொடங்கவில்லை.


மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் இன்று டெல்லி வந்தடைந்தார். இங்கு அவர் கலந்துகொள்ள இருந்த செய்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி இன்று கடைசி நேரத்தில் ரத்தானது.

இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தை டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலையும் சந்தித்தார்.

அரசியல் நிலவரம் குறித்தும், மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் அவர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.