மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மோடியின் பணமதிப்பிழப்பில் தொடங்கி ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் போராட்டம், பத்திரிகையாளர்கள் கொலை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு என பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக பட்டியலிட்டு குற்றம்சாட்டினார்.

“சவுக்கிதார் எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஏழைகளின் காவலர் அல்ல. பணக்காரர்களின் காவலர்” என்றும் கமல் விமர்சனம் செய்துள்ளார்..

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது 1000 பேரை காப்பாற்றுவதற்கு என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதை நினைவுகூர்ந்து, “பாஜக தமிழகத்தை மதிக்கவே இல்லை என்பதற்கு இந்த அம்மாதான் உதாரண