ஏப்ரல் 2 அன்று நடைபெற்ற கமல் – விஜய் சேதுபதி நேரலையில் ‘மருதநாயகம்’ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் “‘மருதநாயகம்’ படம், வெப் சீரிஸ், புத்தகம் என எந்த வடிவத்தில் தான் வரும்” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கமல் கூறியதாவது:
“புத்தகம் வடிவில் என்றால் உடனே வந்துவிடும். நான் அடுத்ததாக ஒரு குறுங்காவியம் ஒன்று எழுதியுள்ளேன். அதற்குப் பெயர் ‘சின்ன கான்சாய்’. அது கான்சாயின் மரணத்துக்குப் பிறகு நடந்த நிகழ்வுகளின் கோர்வை அது. எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை அது. அதெல்லாம் எளிதாக செய்துவிடலாம். படமென்றால் பணம் வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், ‘மருதநாயகம்’ கதையைக் கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டும். நான் நினைத்துக் கொண்டிருந்த மருதநாயகத்துக்கு 40 வயது. அல்லது வேறு நடிகர் நடிக்க வேண்டும். இல்லையென்றால் கதையைக் கொஞ்சம் மாற்ற வேண்டும்”
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.