சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘‘மையம் விசில் ஆப்பிற்கு வந்த புகார்களின் அடிப்படையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. மக்கள் நீதி மையத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்குமா?’’ என கேள்வி எழுப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய மனித உரிமைகள் கமிஷனுக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளதாக கமல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.