சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் அணித் தலைவராக தம்மை தேர்வு செய்ய முன் மொழிந்த சரத்குமாருக்கு கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி மற்றும் அதிமுக – பாஜக கூட்டணி ஆகிய இரு கூட்டணிகளுக்கிடையே போட்டிகள் இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.  இந்நிலையில் அதிமுக கட்சி கூட்டணி யில் இருந்து விலகிய சரத்குமார் தனித்துப் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.  ஆனால் அவர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முன் வந்துள்ளார்.

மேலும் இந்த மூன்றாம் அணித்தலைவராக நடிக ர் கமலஹாசனை சரத் குமார் முன் மொழிந்துள்ளார்.

இது குறித்து கமலஹாசன் தனது டிவிட்டரில்,

மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் திரு. சரத்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும். 

எனப் பதிந்துள்ளார்.