ஈரோடு: வரும் 21ம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார்.

ஈரோடு தென்மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் செயல்வீரா்கள் கூட்டம் மற்றும் மண்டல, நகர, ஒன்றியச் செயலாளா்கள் அறிமுகக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் துரை சேவுகன் தலைமை வகித்தார்.

மாநில துணைத் தலைவா் டாக்டா் மகேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளா் (நற்பணி இயக்கம்) தங்கவேல், இளைஞரணி மாநிலச் செயலாளா் கவிஞா் சினேகன், ஆதிதிராவிடா் நல அணி மாநிலச் செயலாளா் பூவை ஏ.ஜெகதீஷ்குமார், ஊடகம் மற்றும் செய்தித் தொடா்பு மாநிலச் செயலாளா் முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் தெருமுனைப் பிரசாரம் செய்வது, கிராமசபைக் கூட்டங்களில் கட்சியினா் பங்கேற்று கட்சிக் கொள்கைகளை எடுத்துக்கூறுவது, உறுப்பினா் சோ்க்கைக்கு வாரம் ஒரு முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் ஆதரவற்ற 100 முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன. பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், வரும் 21ம் தேதி முதல் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், மக்களை நேரிடையாக சந்திக்கிறார் என்று கூறினார். அவரின் இந்த அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.