’தலைவன் இருக்கிறான்’ படத்தை இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இருவரும் இன்ஸ்டாகிராமில் சந்தித்து பேசினர்.


ரஹ்மான் குறித்து கமல் கூறியதாவது:
எந்தவொரு இசை அமைப்பாளரும் பிரபலம் ஆவதற்கு முன்பே அவர்களை நான் அடை யாளம் கண்டுவிடுவேன் என்று என்னைப் பற்றி சொல்வார்கள். 90களில் நான் இளைய ராஜா இசையில் லயித்திருந்ததால் ஏ.ஆர். ரஹ்மான் பற்றி தாமதமாகத்தான் அடை யாளம் கண்டு கொண்டேன். இந்தியன் படத்திற்கு அவர் இசை அமைத்த, ’கப்பலேறி போயாச்சி.. பாடலை முதலில் நான் கேட்ட போது அவ்வளவாக அழுத்தம் இல்லையே என்று ஷங்கரிடம் கூறினேன். ஆனால் பிறகு ஷூட்டிங் நடந்த போது அந்த அனுபவம் ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது. சமீபத்தில் நானும் ரஹ்மானும் சந்தித்தபோது ஒருவார்த்தையில் இருவரும் ஆர்வம் காட்டினோம். அந்த வார்த்தையை வைத்து பாடல் எழுதுங்கள் என்றார் ரஹ்மான். அது பின்னிரவு நேரம். நான் வேகமாக வீட்டுக்கு வந்து அதே மூடில் பாடல் எழுதினேன் . காலை 8.30 மணிக்கு பாடல் எழுதி முடித்து விட் டேன்’ என்றார்.
இந்தியன் ப்டத்துக்கு பிறகு 19 வருடம் கழித்து தலைவன் இருக்கிறான் படத்தில் கமல். ரஹ்மான் இணைகின்றனர்.