https://www.instagram.com/p/B-FMQgmBn_u/

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, இந்தியா முழுவதும் 467 பேர் கொரோனா வைரஸால் பாதிகப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன், அக்‌ஷராஹாசன் சென்னையில் தனித்தனி வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்று வந்த நடிகை ஸ்ருதிஹாசன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதேபோல் அவரது தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.