மதுரை:

நேற்று புதிய கட்சியை தொடங்கி உள்ள கமல், கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டியுள்ளார்.  நேற்று மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல், கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்தும், கட்சியின் கொள்கை குறித்தும் பேசினார்.

அதைத்தொடர்ந்து, தனது கட்சியின் அடுத்தக்கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்றும், வரும் ஏப்ரல் மாதம் 4ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாம் வீட்டில் இருந்த தனது அரசியல் பயணத்தை தொடங்கிய  நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என கட்சியின் பெயரையும், ஆறு கைகள் இணைந்த சின்னத்தை கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

அதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல், கட்சியின் கொடி சின்னம் குறித்து, அது  இடது பக்கமா? வலது பக்கமா? என கேட்காதீர்கள். நடுவில் பயணிக்கவே விரும்புகிறேன் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போத, தனது மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று கூறினார்.