நேற்று மதுரையில் மாநாடு நடத்தி, தனது கட்சி பெயரான “மக்கள் நீதி மய்யம்” என்ற பெயரை அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன். கட்சிக்கான கொடியையும் அறிமுகம் செய்தார். அப்போது அவர், தமது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாக தெரிவித்தார். ஆனால் அவரது கட்சி இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கட்சியைப் பதிவு செய்ய, தேர்தல் ஆணையத்தல் விண்ணப்பம்தான் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில்,” நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியை பதிவு செய்ய விண்ணப்பம் செய்துள்ளார். அந்த விண்ணப்பத்தை கையில் எடுக்கவே ஒரு மாதம் ஆகும் ஆகவே அவரது கட்சி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுவது தவறு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சி பெயரை அங்கீகரிக்க மூன்று முதல் நான்கு மாத காலம் ஆகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.