சென்னை:

மீபத்தில் மரணம் அடைந் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜின் மறைவைத் தொடர்ந்து, சூலூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ், நேற்று முன்தினம்  மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு நேற்று முதல்வர், துணை முதல்வர் இறுதி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், சூலூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. . இது கறித்து,, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தமிழக சட்டமன்ற செயலகம் கடிதம் எழுதி உள்ளது.

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, ஓட்டப்பிடராம் தொகுதி வழக்கு வாபஸ் பெற்றப்பட்டுள்ளது, அதுபோல திருப்பரங்குன்றம் வழக்கிலும் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சூலூர் தொகுதி காலியானதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அரவக்குறிச்சி தவிர மேலும் 3 தொகுதிகள் தேர்தல் நடத்த தயாரான நிலையில் உள்ளது. ஆனால், தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.