சென்னை:

 நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை முறைகேடாக விற்பனை செய்து பணத்தை கையாடல் செய்ததாக நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி உள்பட முன்னாள் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் சங்க தலைவர் விஷாலுக்கு காஞ்சிபுரம் குற்றப்பிரிவு அலுவலகம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், விசாரணைக்கு விஷால் ஆஜராகவில்லை. தற்போது படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், மற்றொரு நாளில் ஆஜராவதாக விளக்கம் அளித்தும் பதில் கடிதம் கொடுத்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேதமங்கலம் என்ற இடத்தில் 29 சென்ட் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தை கடந்த 2006ம் ஆண்டு, அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார்,  பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி உள்பட நிர்வாகிகள் விற்பனை செய்து கையாடல் செய்ததாக, தற்போதைய  நடிகர் சங்க தலைவர் விஷால் காஞ்சிபுரம்  காவல்துறையில் புகார் கூறியிருந்தார். இதற்கான ஆவனங்களை நடிகர் நாசர் காஞ்சிபுரம் காவல்துறை அதிகாரியிடம் நேரில் சமர்ப்பித்தார்.

‘இதையடுத்து இந்த நிலம் விற்பனை குறித்து காஞ்சிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக  நடிகர் சரத்குமார், ராதாரவி, உள்ளிட்ட நான்கு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புகார் கொடுத்த நடிகர் சங்க தலைவர் விஷால், விசாரணைக்கு ஆஜராகும்படி  காஞ்சிபுரம் குற்றப்பிரிவு அலுவலகம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், விசாரணைக்கு விஷால் ஆஜராகவில்லை.

தற்போது தான், படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், மற்றொரு நாளில் ஆஜராவதாக விளக்கம் அளித்தும் பதில் கடிதம் கொடுத்துள்ளார்.