சென்னை:
ந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
‘கறுப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனல், சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டது. இது இந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஏராளமான புகார்கள் கூறப்பட்டது.

இதையடுத்து, கறுப்பர் கூட்டம் என்ற சேனல் நிமீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன், சோமசுந்தரம், குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும்,  ‘கறுப்பர் கூட்டம்’ அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதோடு,  அந்த நிறுவனத்தின  யூடியூப் சேனலில் உள்ள விடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த சேனலை முற்றிலுமாக தடை செய்யக்கோரி யூடியூப் நிறுவனத்துககும் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டம் சட்டம் பாய்ந்துள்ளது.   சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் குண்டர் போடப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.