மிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். இந்தியில் ’மணி கர்ணிகா’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக் கிறார். தற்போது ஏ.ஏல்.விஜய் இயக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க் கை படம் ’தலைவி’யில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார்.

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை பற்றி கங்கனா கருத்து தெரிவித்தார். போலீஸ் அவரை விசாரணைக்கு அழைத்தபோது மனாலிக்கு சென்று அங்குள்ள வீட்டில் தங்கினார். அவர் தங்கி இருந்த வீட்டின் அருகே 2 முறை துப்பாக்கியில் சுடும் சத்தம் கேட்டதாக கங்கனா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தரப் பட்டது. தனது உயிருக்கு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் தன்னை கொல்ல சிலர் முயற்சிப்பதாக வும் தெரிவித்தார் கங்கனா.
கங்கனாவின் இந்த பேச்சை கேட்டு அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார். மகளின் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்றும் அவரது பாதுகாப்புக்கு வேண்டி யும் வீட்டில் சிறப்பு பூஜை, யாகம் நடத்தி னார். புரோகிதர்களை வீட்டிற்கு அழைத்து இந்த புஜையை குடும்பத்தார் முன்னிலையில் நடத்தினார். 1 லட்சத்து பதினைந்தா யிரம் மகாமிருந்துந்திய மந்திரங்களையும் சொல்ல வைத்துள்ளார்.