பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

மேற்கு வங்க தேர்தல் முடிவுக்குப் பிறகு, வன்முறையை தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய ட்வீட்களை நடிகை கங்கனா ரனவத் வெளியிட்டு வருவதாகக் கூறி அவரது ட்விட்டர் கணக்கு, நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

“வெறுக்கத்தக்க நடத்தை மற்றும் தவறான நடத்தை” குறித்த ட்விட்டர் கொள்கையை இந்த கணக்கு மீண்டும் மீண்டும் மீறியதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.