இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் பிஸியாகியுள்ளனர் .

இந்நிலையில் நடிகை கனிஹா கடந்த 10 நாட்களாக வீட்டிற்குள் இருந்தேன், இன்று தான் முதல் முறையாக அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியே வந்தேன் . என்னை அறியாமல் அழுதே விட்டேன் வெறிச்சோடிய சாலைகளை பார்த்து .

நம் அனைவரையும் தாக்கிய யதார்த்தத்தை ஜீரணிக்க முடியாமல் , குழந்தைகள் ஏன்தெருவில் விளையாடக்கூடாது என குழப்பத்தை கண்டு மனம் கலங்கினேன் .

நம் இயந்திர வாழ்க்கை அனைத்தும் ஒரு நிலைக்கு வந்துவிட்டது .நம்மில் பலருக்கு இந்த நேரத்தில் வருமானம் கிடையாது. நாம் சேமித்தது எவ்வளவு காலம் தொடரப் போகிறது என்பது தெரியாது. நமக்கு எஞ்சியிருப்பது நம்பிக்கை மட்டுமே என கூறியுள்ளார் .