லக்னோ:  பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு 4வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்திருக்கிறது.

லண்டனில் இருந்து இந்தியா வந்த பாடகி கனிகா கபூர் கான்பூர் மற்றும் லக்னோ சென்றிருந்தார். அப்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.

அதன் பிறகு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனா அறிகுறி இருந்தும் அதை மறைத்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது.

தற்போது சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள கனிகா தமது அதிகப்படியான, அஜாக்கிரதையான நடவடிக்கை காரணமாக மருத்துவமனை நிர்வாகத்தால் விமர்சிக்கப்பட்டார்.

இந் நிலையில், அவரது உறவினர் கூறி இருப்பதாவது: சோதனை அறிக்கைகள் குறித்து நாங்கள் இப்போது கவலைப்படுகிறோம். கனிகா சிகிச்சைக்கு போதிய ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது. ஊரடங்கு அமலில் உள்ள  நிலையில், அடுத்த கட்ட சிகிச்சைக்காக நாங்கள் அவளை விமானத்தில் கூட செல்ல முடியாது. அவள் குணமடைய மட்டுமே நாங்கள் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்.