இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் பாடகி கனிகா கபூர் ஹோலிக்கு முன்பு லண்டனில் இருந்து மும்பைக்கு திரும்பியுள்ளார் . பின் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் லக்னோவுக்குச் சென்றுள்ளார் . அப்பொழுது அவர் ஏற்பாடு செய்த விருந்தில் பலர் பங்கேற்றனர்.

விருந்துக்கு பிறகு கனிகாவின் உடல்நிலை மோசமைடந்ததை அடுத்து அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதியானது. இதனால் கனிகா கபூரின் அலட்சியம் காரணமாக உத்தரபிரதேசத்தில் அவருக்கு எதிராக பல எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கணிக்க கபூரின் ஐந்தாவது கோவிட் -19 சோதனை எதிர்மறையாக வந்துள்ளது.இருப்பினும், அவரது அடுத்த சோதனையும் எதிர்மறையாக (Negative) இருக்கும் வரை, அவர் பிஜிஐ மருத்துவமனையில் (PGI Hospital) சிகிச்சையில் இருப்பார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது .