டெல்லி: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவருமானவரும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கோவிட் -19 காரணமாக கன்னியாகுமரி எம்.பி., ஸ்ரீ எச் வசந்தகுமாரின் அகால மரணம் பற்றிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு சேவை செய்வதற்கான காங்கிரஸ் சித்தாந்தத்திற்கான அவரது அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.

அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மனமார்ந்த இரங்கல்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.