https://www.instagram.com/p/B-j9Ff1pQWT/

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

இதை கரீனா கபூர் தன் கணவர் சைஃப் அலிகான் மற்றும் மகன் தைமூருடன் தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தை அனுபவித்து வருகிறார்.

கரீனா பெரும்பாலும் தைமூரின் அன்றாட வழக்கத்தின் ஒரு காட்சியை ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்கிறார்.

அதன்படி சனிக்கிழமை கரீனா ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் .அதில் அவர் பாஸ்தாவால் செய்யப்பட்ட நெக்லஸ் அணிந்திருப்பதைக் காணலாம்.

“பாஸ்தா லா விஸ்டா, தைமூர் அலி கான் கையால் செய்யப்பட்ட நகைகள்.” , #QuaranTimDiaries என பதிவிட்டுள்ளார் .