பெங்களூரு

ர்நாடக அரசு அமல்படுத்த இருந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவுதலுக்காக அறிவிக்கப்பட்ட ஒரு வார ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.  இதையொட்டி நேற்று கர்நாடக அரசு இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவு இட்டிருந்தது.   இந்த ஊரடங்கு உத்தரவு ஜனவரி 2 ஆம் தேதி காலை 5.30 மணியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கர்நாடக அரசின் இந்த முடிவு காவல்துறையின் உயர் அதிகாரிகள், மற்றும் தலைமைச் செயலர் யாருடனும் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த இரவு நேர ஊரடங்கு நீட்டிப்புக்கு அவர்கள் யாரும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.  இதையொட்டி கர்நாடக அரசுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலை உண்டாகி உள்ளது.

ஆகவே ஏற்கனவே அறிவித்திருந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவைக் கர்நாடக மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.  அரசு இவ்வாறு தனது முடிவில் திடீர் பல்டி அடித்தது மக்களிடையே கடும்  பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.