பெங்களுரூ:
பிராமண மணப்பெண்களுக்கு பண உதவி வழங்கும் கர்நாடகா அரசாங்கத்தின் திட்டம்  அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிராமண சமூகத்தின் வறிய மக்களுக்கு உதவுவதற்காக அருந்ததி மற்றும் மைத்ரேயி ஆகிய இரு திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம் தெரிவிக்கும் பொழுது கர்நாடக மாநிலத்தின் எதிர்கட்சி, இத்திட்டம் பிற்போக்குத்தனமானது என்று குற்றம் சாட்டியுள்ளது.
இத்திட்டத்தை கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம், மாநிலத்தில் பிராமண பெண்களுக்காக இரு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது, அவ்வகையில் அருந்ததி திட்டத்திற்கு மணமகளின் குடும்பத்திற்கு ரூபாய் 25,000 வழங்கப்படும். மைத்திரேயி எனப்படும் மற்றொரு திட்டத்தில் மணமகள் ஒரு பூசாரியை மணந்தால் 3 லட்சம் வழங்கப்படும்.
அருந்ததி திட்டத்தின் மூலம் 550 பிராமண குடும்பங்களும், மைத்ரேயி திட்டத்தின் மூலம் 25 பிராமண குடும்பங்களும் பயனடைவர்கள்.
இதைப் பற்றி பேசிய பிராமண மேம்பாட்டு வாரியத்தின் இயக்குனரான சச்சிதானந்தா தெரிவித்துள்ளதாவது: இத்திட்டத்தால் பயனடைபவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் பிராமணராகவும் இருக்க வேண்டும், மேலும் இத்திட்டத்தில் பயனடையும் மணமகளுக்கும் மணமகனுக்கும் இது முதலாவது திருமணமாக இருக்க வேண்டும்.
இதைப் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இளைஞர் பிரிவின் தேசிய பிரச்சார தலைவர் ஒய்பி ஸ்ரீவட்சா: திருமணம் என்பது தனிப்பட்ட இருவரின் தேர்வாகும், இவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பிற்போக்குத்தனமான முடிவு மட்டுமல்லாமல் பெண்களுக்கு விரோதமானதாக கருதப்படுகிறது, பிராமண பெண்களுக்கு உதவ வேண்டும் என்றால் பிராமண மேம்பாட்டு வாரியம்… பிராமணப் பெண்கள் தொழில்முனைவோருக்கு கடன் கொடுக்கலாம், ஏழை பிராமண பெண்களின் கல்விக்கு நிதியளிக்கலாம், அதையெல்லாம் விடுத்து இவ்வாறான ஒரு புதிய திட்டத்தை பிராமண மேம்பாட்டு வாரியம் கொண்டு வந்துள்ளது கேலிக்குரியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிராமண வாரியத்தின் இயக்குனர் சச்சிதானந்தா தெரிவித்துள்ளதாவது: பூசாரிகள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர், அவர்களுடைய வேளையும் நிச்சயமற்றதாக உள்ளது, ஆகையால்தான் மைத்ரேயி திட்டத்தில் 3 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அந்த பணத்தை பயன்படுத்தி பூசாரியின் குடும்பத்தினர் ஒரு சிறு தொழில் துவங்கலாம் என்று சச்சிதானந்தா தெரிவித்துள்ளார்.