பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில், தனது குடும்பத்தினரை கடித்து குதற வைந்த சிறுத்தையை, அந்த குடும்பத்தலைவர் கடுமையாக போரிட்டு சிறுத்தையை கொன்றார். அந்த நபரை ஜார்ஜ்குட்டி என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அராசிகேர் தாலுகா பகுதியில் வசித்து வருகிறார்  ராஜகோபால் நாயக் என்பவரது குடும்பம். இவர் மனைவி சந்திரம்மா மற்றும் குழந்தை கிரானுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை அருகே உள்ள புதரிலிருந்து சிறுத்தைப்புலி ஒன்று அவர்கள் மேல் குதித்து கடிக்கத் தொடங்கியது.  இதனால் ஆத்திரம் அடைந்த ராஜகோபால் சிறுத்தை மீது பாய்ந்து அதன் கழுத்தை நெரித்து தனது முழங்கையால் சிறுத்தையில் தலையில் அடிக்கத்தொடங்கினார்.

ராஜகோபால் தாக்குதலை மீறி சிறுத்தை அவர்மீது பாய்ந்து தாக்கியது. இதனால், ராஜகோபால் காயமடைந்த நிலையிலும், சிறுத்தையின் கழுத்தை விடாமல் நெரித்து, அடித்துக்கொன்றார்.  இதனால்,  மூச்சுத்திணறிய சிறுத்தை அதே இடத்தில் இறந்தது.

சிறுத்தையுடன் போரிட்ட ராஜகோபாலுக்கும் முகம் மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதையறிந்த அந்த பகுதியைச்சேர்ந்தவர்கள் அங்கு குவிந்தனர்.  தொடர்ந்து,  ராஜகோபாலை பாராடிய மக்கள், அவரையும், அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  அழைத்துச்சென்றனர்.

சிறுத்தையுடன் போரிட்டதால்,  உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில், நெற்றியில் ரத்தம் வழிய வழிய ராஜகோபால் இறந்த சிறுத்தையின் அருகில் அமர்ந்து தண்ணீர் குடிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த உண்மை சம்பவத்தை  நினைவுபடுத்தும் வகையில், மோகன்லால் ஜார்ஜ்குட்டி என்ற வேடத்தில் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான  திரிஷ்யம் திரைப்படத்தில் தற்காப்புக்காக  தனது குடும்பத்தை காப்பாற்றும் வகையில் ஒருவரை கொலை செய்யும் வகையில் அமைந்திருந்தது. அதை ஒப்பிட்டு நெட்டிசன்கள், ராஜகோபாலை ஜார்ஜ்குட்டி என பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.