டில்லி,

ன்னிய செலாவணி மோசடி வழக்கில் டில்லி தேடப்படும் நபர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தைலை தொடர்ந்து இன்று டில்லியில் உள்ள  சிபிஐ அலுவல கத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார்.

விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

டில்லியில் விசாரணைக்கு ஆஜராகி உள்ள கார்த்தியிடம்  சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை வரை விசாரணை நடைபெறும் என்றும், தேவைப்பட்டால் நாளையும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும்,  அவரது பதிலை பொறுத்தே அவரை கைது செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இதன் காரணமாக அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்தது..

இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது.  இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில், சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது,  கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்குத் தடை இல்லை என்று உத்தரவிட்டதோடு, சி.பி.ஐ முன் ஆஜராகி விளக்கமளிக்கத் தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில்,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன்  கார்த்தி சிதம்பரம்வி சாரணைக்காக ஆஜராகி உள்ளார்.