டில்லி

கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம் என சி பி ஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.  அவர் தனக்கு தடையை நீக்கி அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.   அது குறித்து பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் சி பி ஐ யிடம் கேட்டு இருந்தது.

தற்போது சி பி ஐ, ”கார்த்தி சிதம்பரம் டிசம்பர் 2 முதல் 10 வரை வெளிநாடு செல்ல நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம்” என பதில் அளித்திருந்தது.   டிசம்பர் 11ஆம் தேதி இந்தியா திரும்புவதாக கார்த்தி சிதம்பரம் உத்திரவாதம் அளித்துள்ளார்.  அதனால் உச்ச நீதிமன்றம் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.