ஜினியை வைத்து, தான் எடுக்க இருக்கும் படத்தில் பிரம்மாண்டம் இருக்காது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது தீவிர அரசியிலில் ஈடுப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், காலா மற்றும் 2.0 ஆகிய படங்களை நடித்து முடித்திருக்கிறார்.  இவற்றில் காலா படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2.0 படத்தில் கிராஃபிக்ஸ் வேலைகள் இருப்பதால் காலதாமதமாவதாக படக்குழு  தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை பீசா, ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார்.

இந்தப் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ், “படத்தில் பிரம்மாண்டம் இருக்காது.  ஆனால், கதையிலும் திரைக்கதையிலும் பிரம்மாண்டம் இருக்கும். மேலும், ரஜினி படத்தில் வழக்கமாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்” என்று கூறினார்.