சென்னை

மிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, வைகோ மீது தமிழகஅரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், வைகோ விடுதலை செய்யப்பட்டார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மதிமுகவை உடைக்க கலைஞர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டி பேசியிருந்தார். மேலும், மதிமுகவை உடைக்க கருணாநிதி முயற்சிப்பதாகவும், இந்த விவகாரத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலையிட வேண்டும் என்று கடிதம் எழுதியிருப்பதாகவும் வைகோ பேசியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த கருணாநிதி, பின்னர் அரசு சார்பில், வைகோ மீது அவதுஹறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில், வைகோ மீதான  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி வைகோவை விடுதலை செய்தது.