சென்னை:

ந்தமானில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க  மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக அந்தமான் புறப்பட்டார். அங்கு திமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

அந்தமான் திமுக சார்பில் கருணாநிதிக்கு அங்கு சிலை நிறுவப்பட்டுள்து. இந்த சிலையை திறந்து வைப்பதற்காக திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் ,இன்று அதிகாலை அந்தமான் புறப்பட்டார். அதிகாலை 4 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலினை திமுகவினர் வழியனுப்பி வைத்தனர்.

அந்தமானுக்கு சர்வதேச நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கருணாநிதியின் சிலையை காணும் போது அவருடைய பெருமைகளை அறிந்துகொள்ளும் வண்ணம் கல்வெட்டும் வைக்கப்படுகிறது.  கருணாநிதி யின் பொன்மொழிகள் மட்டும் அவரது சிலைக்கு கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலை தமிழகத்தில் வடிவமைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தமான் சென்றுள்ள ஸ்டாலின் இந்த சிலையை திறந்து வைப்பதுடன்,  அந்தமான் திமுக நிர்வாகி இல்லத் திருமணத்தையும் நடத்தி வைக்கிறார். பின்னர்   அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் உரை நிகழ்த்த உள்ளார்.