சென்னை:

குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க மாட்டார் எனஅறு  அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற் கான தேர்தல் இன்று நடக்கிறது.  தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை தலைமைச் செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  இன்று காலை முதல் நடக்கிறது.

திமுகவில் 89 எம்எல்ஏக்களும், 4 மாநிலங்களவை எம்.பி.க்களும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரண மாக கடந்த எட்டு மாதங்களாக கோபாலபுரம் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவரும், திருவாரூர் தொகுதி எம்எல்ஏவு மான கருணாநிதி, இத்தேர்தலில் வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.  இதுகுறித்து நேற்று மு.க.ஸ்டாலின் ‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் கருணாநிதி வாக்களிப்பாரா என்பது நாளைதான் (இன்று) தெரியும்’’ என்றார்.

இந்த நிலையில் தற்போது, “குடியரசு தலைவர் தேர்தலில் கருணாநிதி வாக்களிக்க மாட்டார்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.