சென்னை,

ன்னும் 15 நாட்களில் கட்சி பணிகள் ஆற்றுவார் கருணாநிதி என்று திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

ஒவ்வாமை காரணமாக டிசம்பர் 1ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7ந்தேதி வீடு திரும்பிய கருணாநிதி கடந்த 15-ஆம் தேதியன்று மூச்சுத் திணறல், தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக மீண்டும் சென்னையிலுள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நலம் பெற்று டிசம்பர் 23-ம் தேதியன்று மாலை வீடு திரும்பினார்.

தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சையும், ஓய்வும் எடுத்து வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்னும் 15 நாட்களில் கட்சி பணி ஆற்றுவார் என்று திமுக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.