சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து வெளியான செய்திகள் பொய்யானது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்ட நிலையில், பிற்பகலில் கருணாநிதி உடல் நலம் குறித்த வதந்தி காட்டு தீ போல் சமுக ஊடகங்களில் பரவியது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள், கட்சியினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. திமுக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கோபாலபுரத்துக்கு படையெடுத்தனர்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி ஆகயோர் கருணாநிதியை சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் கருணாநிதி குடும்பத்தாரும் அவரை சந்தித்னர். இதைதெடர்த்து துரைமுருகன், எஸ்ரா ஆகியோர் கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.

இது போல் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல முறை வதந்திகள் பரவியுள்ளது. தொழில்நுட்பம் இல்லாத காலம் முதல் இந்த வதந்திகளுக்கு பெயர் பெற்றவர் கருணாநிதி.

தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு உடனடியாக தொலைக்காட்சிகளில் தோன்றி தனது தொண்டர்களை கருணாநிதி ஆசுவாசப்படுத்தி வந்தார். இந்நிலையில் அவர் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் ஓய்வில் இருக்கும் போதும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.