ஸ்ரீநகர்,
காஷ்மீரில் எல்லை பகுதி வாயிலாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் ஜம்முகாஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் செக்டர் பகுதி வழியாக இன்று அதிகாலை இந்த ஊடுடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது. அப்போது ரோந்து பணியில் இருந்த ராணுவத்தினர் அவர்கள்மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த அதிரடி தாக்குjலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் வேறு யாரேனும் ஊடுருவி உள்ளனரா என தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.