டில்லி:

ம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து மத்திய அரசு மசோதா நிறைவேற்றி உள்ள நிலையில், இதுகுறித்து வெளிநாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் அந்தந்த நாட்டு அதிகாரிகளிடம் விளக்கம் தெரிவித்தனர்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து  அளிக்கின்ற 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா நேற்று பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்ககல் செய்யப்பட்டு நிறைவே ற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆர்.எஸ் .எஸ், சிவசேனா, பிஜூ ஜனதாதளம், அதிமுக ,ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் , பகுஜன் சமாஜ், தெலுங்குதேசம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

ஏற்கனவே பாஜக தனது தேர்தல் அறிக்கையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து அறிவித்திருந்த நிலையியில் அதை நிறைவேற்றி உள்ளதாக கூறி உள்ளது.

மாநிலங்களவையில்  இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 மசோதாக்களும், எதிராக 61 வாக்குகள் பதிவாகின.  காஷ்மீர் இட ஒதுகீட்டு மசோதா மற்றும், ஜம்மு காஷ்மீரை பிரிக்கும் மசோதா, மற்றும்  ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபின்னர் மாநிலங்களவை  ஒத்தி வைக்கப்பட்டது. காஷ்மீரில் உள்ள எல்லை  மறுவரையறை செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  காஷ்மீர் குறித்த இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து,  வெளிநாடுகளில் உள்ள  இந்திய தூதரக அதிகாரிகள், குறிப்பாக ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இந்திய அதிகாரிகள், அந்நாட்டு வெளியுறவுத்துறை அஅதிகாரிகளிடம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவு எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து  விளக்கம் அளித்தனர்.