விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 3’.

ஆரம்பம் முதலே நிறைய சோக காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருவதால், அதைக் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

போதும்பா விட்ருங்கப்பா… இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க… இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை… இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு…

இதே சேனல் ல “கதையல்ல.. னு” சொல்லி ஒரு நிகழ்ச்சி…. வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க… அதுல ஆரமிச்சது… எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக் !

எங்க பிளாட்ஸ் ல எல்லா வீட்டுலயும் குழந்தைகளாம் பாக்குறாங்க…. குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது? Parents, be responsible ! என பதிவிட்டுள்ளார் .