சென்னை,

ஞ்சாவூர் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான மக்கள் போராட்டம தீவிரமடைந்ததை தொடர்ந்து,  சென்னையில் போராட்டம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  தற்போது சட்டமன்றம் நடைபெற்று வருவதால், கதிராமங்கலம் கிராம மக்கள் கோட்டையை முற்றுகையிடப்போவதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து, இன்று தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் வழக்கத்தை விட அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து தலைமைசெயலகத்துக்குள் வருபவர்கள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.