தஞ்சை :

திராமங்கலம் போராட்டத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட வர்களின் 10 பேர் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தஞ்சை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை விரட்டினர்.  கடந்த மாதம் 30-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது   மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் ஜாமினில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.

அவர்களது மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த தஞ்சை நீதிமன்றம், இன்று இரண்டாவது முறையாக அவர்களின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது.

போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 10 பேரின் ஜாமீன் மனுவும் 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.