“ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்று சிவாஜி கணேசன் நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் கண்ணதாசன் ஓர் பாடலை எழுதியிருப்பார்.

இந்த ஒரே பாடலில், எட்டு திருக்குறள் வகுத்த குறள் நெறியை கூறியிருப்பார், அதில் இடம்பெற்ற குறள்நெறி :

1. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். (293)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி….

2. இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன். (629)

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…

3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால்

தான்கண் டனைத்து இவ்வுலகு. (387)

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும்.

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மானப் பெரிது. (124)

நிலைத் திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.

5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (35)

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.

6. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு. (80)

7. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு. (110)

8. கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு. (571)

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.

இறைவன் அளித்த ஈடுஇணையில்லா அற்புத கவிஞர் கவியரசு கண்ணதாசன், திருக்குறளையும் திரையிசையில் விட்டுவைக்கவில்லை என்று இந்த பாடல் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

[youtube https://www.youtube.com/watch?v=gjXdZUw4kpc]