சென்னை:

மிழக பட்ஜெட்டில், தமிழர்கள் தொன்மையான நிகழ்வுகளை உலகுக்க பறைசாற்றியுள்ள கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது. இது தமிழக மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில், கீழடிபகுதியில் உள்ள பொதுமக்கள், அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து  ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை 5 கட்ட அகழ்வராய்ச்சிகள் நடைபெற்றுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை நடைபெற்ற அகழ்வராய்ச்சியில்,  சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொன்மையான மனிதர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 15,500 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த பொருட்களைக்கொண்டு அங்கு அருங்காட்சியம் அமைக்கவும் என்றும்,  தமிழர்களின் தொன்மையான நாகரிகங்கள் உலகுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதற்கு தமிழக அரசு ஆவன செய்யப்படும் என்று கூறி வந்த நிலையில், நேற்றைய பட்ஜெட்டில், கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்படும் என்றும்,  அருங்காட்சியகம் அமைக்க 12.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இருப்பதாகவும் துணைமுதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார்.

தமிழக அரசின்  இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள கீழடி பகுதி  தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுதும் வகையில் கேக் வெட்டி கொண்டாடி,  தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.