இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான கீரவாணி என்கிற மரகதவாணி தனது ட்விட்டர் பதிவில் சிறுவீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இளையராஜாவின் பாடல் ஒன்றைப் பாடினால் அதிலிருக்கும் இனிமை நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என அதில் பதிவிட்டுள்ளார் .

இந்த வீடியோ பதிவு இளையராஜா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.