கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மதிவதனி ஐ.ஏ.எஸ். ஆக நடித்த அறம் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரானார் கோபி நயினார். 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறம் 2 ஷூட்டிங் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

நயன்தாரா அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அறம் 2 வராது என்று அனைவரும் நினைத்த நிலையில் தற்போது அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அறம் 2 படத்தில் மதிவதனியாக நடிக்குமாறு கோபி நயினார் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.