புதுடெல்லி: இன்று நடைபெற்றுவரும் டெல்லி மாநில சட்டசபைக்கான வாக்குப்பதிவில் பெண்கள் அதிகளவில் முன்வந்து வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

டெல்லி மாநில சட்டசபைக்கான வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வாக்களித்து முடித்த முதல்வர் கெஜ்ரிவால் டிவீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “கண்டிப்பாக ஓட்டளியுங்கள். வீட்டிலும், நாட்டிலும் பொறுப்புடைய பெண்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும்.

டெல்லி உங்களுடன் உள்ளது. அனைத்து பெண்களும் தவறாமல் சென்று வாக்களியுங்கள். கூடவே உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களையும் அழைத்துச் சென்று வாக்களிக்கச் செய்யுங்கள். யார் சரியான நபர்? யாருக்கு நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? என உங்கள் கணவருடன் ஆலோசியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.