டெல்லி:

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கருப்பு பணம் மாற்றி மோசடியில் ஈடுபட்டதாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கெஜ்ரிவால் கருப்பு பணம் மாற்றியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது . அவர் பண மோசடியில் ஈடுபட்டார். அவருக்கு எதிராக சி.பி.ஐ.யிடம் புகார் செய்வேன்.

மொகாலா கிளினிக் மோசடியை அம்பலப்படுத்துவேன். இது மிகப்பெரிய மோசடி திட்டம். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆதாரம், ஆவணங்கள் அடிப்படையில் தான் கூறுகிறேன்.

தேர்தல் கமிஷனுக்கு ஆம் ஆத்மி தவறான வங்கி விபரத்தை தெரிவித்துள்ளது. நன்கொடை விபரத்தையும் மறைத்துள்ளது’’ என்றார்.