டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரூ.1 கோடி வழங்கி உள்ளார்.

கொரோனா தொற்றால் டெல்லியில் 4,257 பேர் பலியாகி உள்ளனர். 1.57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1.41 லட்சம் பேர் குணம் பெற்றுவிட்டனர்.

11,271 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களில் இதுவரை 30 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இந்நிலையில் வடக்கு டெல்லி பகுதியில் கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்தினரை முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது மனைவியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

பின், செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்யும் போது அவர் இறந்துள்ளார். இவர் போன்ற அனைத்து கொரோனா போர் வீரர்களை பற்றி பெருமிதம் கொள்கிறோம் என்று கூறினார்.