திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,789 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று புதிதாக 7,789 பேருக்கு கொரோனா உறுதியாக மொத்த பாதிப்பு 3,17,930 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, மொத்த பலியின் எண்ணிக்கை 1,090 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று ஒரே நாளில் 7,082 பேர்  குணமடைய மொத்த எண்ணிக்கை 2,22,231 ஆக உள்ளது. தற்போது 94,524 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவித்தார்.