திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 8,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 8,511 பேருக்கு கொரோனா உறுதி ஆனதால் மொத்த பாதிப்பு 3,77,835 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 1,281 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 6,118 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து விட்டனர். மொத்தமாக குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,80,793 ஆக உள்ளது. தற்போது 95,657 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று கூறி உள்ளார்.