திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,607 ஆக உள்ளது.

வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழக்க, பலியானவர்களின்  எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 43 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 95 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 14,467 நோயாளிகள் குணமடைந்த நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்டடு 11,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.