திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: இன்று புதிதாக 8,369 பேருக்கு கரோனா தொற்று உறுதியாக மொத்த பாதிப்பு 3,61,842 ஆக உள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 1,232 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 6,839 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதை அடுத்து குணம் பெற்றோரின் மொத்தம் எண்ணிக்கை 2,67,082 ஆக உள்ளது. 93,425 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவித்தார்.